விளையாட்டு (Sports)

இத்தாலி வீராங்கனையின் மூக்கை உடைத்ததால் அல்ஜீரியா வீராங்கனை ஆணா? பெண்ணா? என எழுந்தது சர்ச்சை

Published On 2024-08-01 16:07 GMT   |   Update On 2024-08-01 16:07 GMT
  • கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
  • ஆணுக்கு எதிராக வலுக்கட்டாயமாக சண்டையிட வைத்தது நியாயமற்றது- இத்தாலி வீராங்கனை.

பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி- அல்ஜீரியாவின் செலிஃப் ஆகியோர் மோதினார்கள்.

கெலிஃப் பெண்கள் பிரிவில் விளையாடினாலும் ஆண்கள் போன்ற பலம் கொண்டவர். போட்டி தொடங்கியதும் கெலிஃப் அதிரடி தாக்குதலில் இறங்கினார். இத்தாலி வீராங்கனை கரினி எதிர்பார்க்காத வகையில் முகத்தை நோக்கி வேகமாக ஒரு பஞ்ச் விட்டார். இதில் இத்தாலி வீராங்கனை நிலைகுலைந்தார். அத்துடன் இனிமேல் எதிர்த்து விளையாட முடியாது என அறிவித்தார். இதனால் 46 வினாடிகளிலேயே போட்டி முடிந்தது.

இதனால் கெலிஃப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இதை இத்தாலி வீராங்கனை கரினியால் ஜீரணிக்க முடியவில்லை. தனது எதிர்ப்பை தெரிவித்தார். மற்றும் கெலிஃப் கைக்கொடுக்க மறுத்துவிட்டார்.

கடந்த வருடம் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியின்போது கெலிஃப் ஆணா? பெண்ணா? என்ன சந்தேகம் எழும்பியது. அப்போது அறிவிக்கப்படாத பாலின தகுதி பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த பரிசோதனையில் அவர் தோல்வியடைந்தார். இதனால் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் பிரிவில் இடம் பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"ஆணுக்கு எதிராக வலுக்கட்டாயமாக சண்டையிட வைத்தது நியாயமற்றது. என்னடைய கண்ணில் ரத்தத்துடன் கடைசி வரைக்கும் சண்டையிட்டேன். என்ன விலை கொடுத்தாவது வெற்றி பெற விரும்பினேன். ஏனென்றால் எனது தந்தைக்கா..." என்றார் இத்தாலி வீராங்கனை கரினி.

கெலிஃப் உயிரியல் ரீதியாக XY குரோமோசோம்களைக் கொண்ட ஒரு ஆண் குத்துச்சண்டை வீரர் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

Similar News