விளையாட்டு (Sports)

1200 கி.மீ. சைக்கிள் பயணம்.. வீட்டு வாசலில் கூடாரத்தில் தங்கி எம்.எஸ். டோனியை சந்தித்த ரசிகர்

Published On 2024-10-03 11:49 GMT   |   Update On 2024-10-03 11:49 GMT
  • அவரது வீட்டு வாசல் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கினார்.
  • முன்னதாக டோனியை சந்திக்க டெல்லியில் இருந்து சென்னை பயணம் செய்தார்.

இந்திய அணியின் வெற்றிகர கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். டோனி. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட எம்.எஸ். டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். உலகளவில் எம்.எஸ். டோனிக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்த நிலையில், எம்.எஸ். டோனியை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர் ஒருவர் டெல்லியில் இருந்து 1200 கிலோமீட்டர்கள் சைக்கிளில் பயணம் செய்து ராஞ்சி வந்தடைந்தார். ராஞ்சியில் உள்ள எம்.எஸ். டோனியின் வீட்டு வாசலில் கூடாரம் அமைத்து தங்கிய ரசிகர், டோனினை சந்திக்காமல் வீடு திரும்புவதில்லை என்ற கணக்கில் அங்கேயே தங்க ஆரம்பித்தார்.

டெல்லியை சேர்ந்த கௌரவ் குமார், தனது சைக்கிள் பயணம் மற்றும் எம்.எஸ். டோனியை பார்க்கும் ஆசை மற்றும் அதற்கான முயற்சி உள்ளிட்ட தகதவல்களை தனது சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். அதன் மூலம் டோனிக்கு எப்படியும் தகவல் கிடைத்து, அவரை பார்க்க முடியும் என்று அவர் கணக்கிட்டு இருந்தார்.

கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் வரை எம்.எஸ். டோனியை சந்திக்க அவரது வீட்டு வாசல் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கிய நிலையில் கௌரவ் குமார் ஒருவழியாக எம்.எஸ். டோனியை சந்தித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

 


இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், "நான் டெல்லியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்து டோனியை சந்திக்க திட்டமிட்டேன், ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. இதனால் சென்னையில் இருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லி வந்துவிட்டேன்."

"தற்போது டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு பயணம் செய்தேன். அங்கு 5-6 நாட்கள் காத்திருந்த பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்ககு. தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையின் அடுத்த பயணத்தை துவங்க தயாராகி இருக்கிறேன்," என பேசியுள்ளார்.

Tags:    

Similar News