தேனியில் கார் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் பலி
- காருக்குள் இருந்த ஆனந்த் மற்றும் அவரது மற்றொரு நண்பர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
- உயிரிழந்த 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தேனி:
கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த ராஜேஷ் மகன் ஆனந்த் (வயது23). இவர் தனது காரில் இன்று காலை பெரியகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கார் மதுராபுரி அருகே வந்து கொண்டிருந்தபோது தர்மபுரியில் இருந்து கம்பம் நோக்கி வந்த சரக்கு லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த ஆனந்த் மற்றும் அவரது மற்றொரு நண்பர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் தேனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடிய மற்றொருவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.