செய்திகள் (Tamil News)

தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக ஓபிஎஸ் மகன் நியமனம்

Published On 2018-05-31 03:42 GMT   |   Update On 2018-05-31 03:42 GMT
தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #ADMK
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் கே.ஏ.கே.முகில், என்.சதன், செவ்வை மு.சம்பத்குமார், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட மாணவர் அணி செயலாளர் க.பாலகுமார், திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் டி.டி.கிருஷ்ணன், மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல், பெரம்பலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் உதயம் எஸ்.ரமேஷ் ஆகியோர் அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து இன்று (நேற்று) முதல் விடுவிக்கப்படுகிறார்கள்.

ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர்களாக கே.ஏ.கே.முகில், டாக்டர் ஜெ.ஜெயவர்தன் எம்.பி., என்.சதன், செவ்பை மு.சம்பத்குமார், மா.இளங்கோவன் ஆகியோரும், துணைச் செயலாளர்களாக டி.ரமேஷ், சி.பி.மூவேந்தன், க.பாலகுமார், பா.வெற்றிவேல் மற்றும் பெரும்பாக்கம் இ.ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக சா.ரமேஷ், திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக டி.டி.கிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உதயம் எஸ்.ரமேஷ், மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக எஸ்.எஸ்.சரவணன், தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அ.தி.மு.க.வினர் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பி.ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஆவார். இவர் முன்னதாக தேனி மாவட்ட அ.தி.மு.க. இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் எம்.பி., மறைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி மகன் கே.ஏ.கே.முகில் ஆகியோருக்கு ஜெயலலிதா பேரவையின் மாநில இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களின் மகன்கள் 3 பேருக்கு ஜெயலலிதா பேரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. #ADMK
Tags:    

Similar News