செய்திகள் (Tamil News)

பாசனத்துக்கு பவானி சாகர் அணை திறப்பு- முதல்வர் பழனிசாமி உத்தரவு

Published On 2018-12-20 06:48 GMT   |   Update On 2018-12-20 06:48 GMT
பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன் கோட்டை கால்வாய் மற்றும் காலிங்கராயன் வாய்க்காலின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 25-ந்தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை கால்வாய்கள், காலிங்கராயன் வாய்க்கால் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை கால்வாய் மற்றும் காலிங்கராயன் வாய்க்காலின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 25-ந்தேதி முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம், அந்தியூர், பவானி, ஈரோடு மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TNCM #Edappadipalaniswami
Tags:    

Similar News