செய்திகள் (Tamil News)
முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த நபர்: ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் மாயமானதாக புகார்
சென்னையில் மனைவி தாய் வீட்டுக்கு சென்ற நேரத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் மாயமான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பூரணலட்சுமி, கணவர் தவறியதால், முகப்பேரை சேர்ந்த கோபிநாத் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பூரணலட்சுமி வீட்டுக்கு வந்த அர்ச்சனா என்பவர் தன்னை கோபிநாத்தின் முதல் மனைவி என கூறிக்கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கோபிநாத்திடம் கோபித்துக்கொண்டு பூரணலட்சுமி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தற்போது வீடு திரும்பிய பூரணலட்சுமிக்கு வீட்டில் இருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் சான்றிதழ்களுடன் கோபிநாத் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து பூரணலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.