தமிழ்நாடு

21 மின்சார ரெயில்கள் இன்று இரவு 9 மணி முதல் அதிகாலை வரை ரத்து

Published On 2024-08-24 09:19 GMT   |   Update On 2024-08-24 09:19 GMT
  • இரவு 8.45 மணிக்கு செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் எழும்பூர்- கடற்கரை நிலையம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் ரத்து.

சென்னை:

சென்னை கடற்கரை- விழுப்புரம் பிரிவில் கடற்கரை-எழும்பூர் இடையே இன்று இரவு 10.30 மணி முதல் நாளை 25-ந் தேதி அதிகாலை 4.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதன் காரணமாக 11 மின்சார ரெயில்கள் முழுவதும் 10 ரெயில்கள் பகுதியும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

கடற்கரையில் இருந்து இன்று இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் முழுவதும் ரத்து.

கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்.

தாம்பரம்-கடற்கரை இரவு 10.40 மணி மின்சார ரெயில், இரவு 11.20 மணி தாம்பரம்-கடற்கரை ரெயில், இரவு 11.40 மணி தாம்பரம்-கடற்கரை ரெயில். திருவள்ளூரில் இருந்து கடற்கரைக்கு இரவு 9.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில். கடற்கரையில் இருந்து திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்கு புறப்படும் ரெயில்.

இரவு 9.20 மணி கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில், இரவு 9.55 மணி கும்மிடிப்பூண்டி-கடற்கரை மின்சார ரெயில், கடற்கரையில் இருந்து அரக்கோணத்திற்கு நாளை அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்,

கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் ஆகிய ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இரவு 8.45 மணிக்கு செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் எழும்பூர்- கடற்கரை நிலையம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு 9.10 மணிக்கு செங்கல்பட்டு - கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் எழும்பூர்-கடற்கரை நிலையம் இடையே ரத்து. திருவள்ளூர்-கடற்கரை இடையே இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் எழும்பூர்-கடற்கரை இடையே ரத்து. செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரவு 10.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் எழும்பூர்-கடற்கரை இடையே ரத்து.

செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரவு 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்.

கடற்கரை-தாம்பரம் இடையே 11.05 மணி, இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை-எழும்பூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், கடற்கரை-செங்கல்பட்டு இடையே நாளை அதிகாலை 3.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை- எழும்பூர் நிலையம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளன என்று சென்னை கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News