தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் 24 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

Published On 2024-10-04 16:43 GMT   |   Update On 2024-10-04 16:43 GMT
  • சென்னை முழுவதும் காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • 24 பேரை பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை முழுவதும் 24 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காவல் ஆய்வாளர்கள் 24 பேரை பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, காவல் ஆய்வாளர் எஸ்.புவனேஸ்வரி என்2 காசிமேட்டு காவல் நிலையத்தில் இருந்து கிண்டிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், காவல் ஆய்வாளர் ஆர்.ரஞ்ஜித் குமார்- மாம்பலம், எஸ், விவேகானந்தன் - தண்டையார்பேட்டை, முகமது புஹாரி- திருவான்மியூர், மணிவண்ணன்- மெரினா, அரோக்கிய மேரி- குற்றப் பதிவுப் பணியகம், ஆனந்தன்- அயனாவரம், அம்பேத்கர்- புலியந்தோப்பு, ஆனந்தபாபு- திருவொற்றியூர், வீரம்மால்- சவுந்தரபாண்டியனார் அங்காரி ஆகிய இடத்திற்கு மாற்ம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல் ஆய்வாளர் அருள் ராஜ்- மதுரவாயல், வசந்த ராஜா- காசிமேடு, ஞான சித்ரா- சிசிபி, ஸ்ரீநிவாசன்- கீழ்பாக்கம், கண்ணன்- கொருக்குபேட், கருணாகரன்- நுங்கம்பாக்கம், கே.எஸ்.ராஜா ஜேஜே நகர், ஜெயபிரகாஷ்- ஓட்டேரி, ஹரிஹரன்- பூக்கடை, ஜானி செல்லப்பா- மாதாவரம், ரெஜினா- விருகம்பாக்கம், பிரசித் தீபா- புழல், செல்வகுமாரி- வளசரவாக்கம், ஸ்ரீ ஜெயலாலி- எம்கேபி நகர் ஆகிய இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags:    

Similar News