தமிழ்நாடு

கோவை புறநகரில் 30 பேர் கண்காணிப்பு- மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் பேட்டி

Published On 2022-11-05 09:48 GMT   |   Update On 2022-11-05 09:48 GMT
  • கோவையில் சி.சி.டி.வி. கேமராக்களை அனைத்து இடங்களிலும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
  • புறநகர் பகுதிகளில் இதுவரை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம்.

கோவை:

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட, திருட்டு போன செல்போன்களை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்துகொண்டு 155 செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவையில் சி.சி.டி.வி. காமிராக்களை அனைத்து இடங்களிலும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி, துடியலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

புறநகர் பகுதிகளில் இதுவரை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். 30 பேர் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News