தமிழ்நாடு (Tamil Nadu)
சென்னைக்கு 440 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம்
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
- சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலத்தின் நெல்லூருக்கு கிழக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை, சென்னைக்கு அருகாமையில் நாளை கரையை கடக்கும்.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது.