தமிழ்நாடு (Tamil Nadu)
இபிஎஸ் தவறான குற்றச்சாட்டை கூறுகிறார்- மு.க.ஸ்டாலின்
- மதுரையில் அமைச்சர்கள் தொடர்ந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
- அனைத்து ஊர்களிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மதுரையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* மதுரையில் அமைச்சர்கள் தொடர்ந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
* 8 இடங்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. வெள்ளத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது.
* அனைத்து ஊர்களிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் கடன் பெற்று திமுக அரசு வழங்கி வருவதாக இபிஎஸ் கூறி வருகிறாரே என்ற கேள்விக்கு,
தினமும் பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என்பதற்காக தவறான குற்றச்சாட்டுகளை இபிஎஸ் கூறி வருகிறார் என்று அவர் கூறினார்.