தமிழ்நாடு (Tamil Nadu)

ரோடு ஷோ நடத்த வேண்டாம்- விஜய்க்கு காவல்துறை அறிவுறுத்தல்

Published On 2024-10-26 10:10 GMT   |   Update On 2024-10-26 10:10 GMT
  • 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.
  • ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.

இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான இறுதிக்கட்ட பணி விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாநாட்டிற்கு வரும்போது ரோடு ஷோ நடத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் ரோடு ஷோ நடத்த வேண்டாம் என தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத.

மேலும், தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி சென்றுவிட்டு அங்கிருந்து மாநாட்டு வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News