தமிழ்நாடு (Tamil Nadu)

திருவட்டார் அருகே குப்பையை எரிக்கும்போது தவறி விழுந்த தொழிலாளி- தீயில் கருகி பலி

Published On 2023-03-30 05:33 GMT   |   Update On 2023-03-30 05:33 GMT
  • திடீரென்று நிலை தடுமாறி அவர் எரிந்து கொண்டிருந்த தீயில் விழுந்தார்.
  • மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

திருவட்டார்:

திருவட்டார் அருகே வியனூர் பிலாங்கால விளை பகுதியை சேர்ந்தவர் ரதிகுமாரி (வயது 41). இவரது தந்தை ரவீந்திரன் நாயர் (74) .

இவர் மகள் வீட்டின் பின்பக்கம் தனியாக வசித்து வந்தார். நேற்று மாலை வீட்டின் பின்பக்கம் இருந்த குப்பைகளை ரவீந்திரன் நாயர் தீ வைத்து எரித்து கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென்று நிலை தடுமாறி அவர் எரிந்து கொண்டிருந்த தீயில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு மகள் மற்றும் பக்கத்துவீட்டை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர்.

அவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் ரவீந்திரன் நாயரை தீக்காயங்களுடன் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரவீந்திரன் நாயர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகள் ரதிகுமாரி கொடுத்த புகாரின் பேரின் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News