தமிழ்நாடு

எனது வளர்ச்சிக்கான பெருமை ஆசிரியர்களையே சாரும்- நடிகர் பாக்யராஜ்

Published On 2024-08-04 05:00 GMT   |   Update On 2024-08-04 05:01 GMT
  • நான் படிக்கும் போது எனது ஆசிரியர்கள் சொல்லி கொடுத்ததை நான் சரியாக கவனிக்கவில்லை.
  • குடும்பத்தில் நாம் அனைத்து காரியங்களையும் பகிர்ந்து கொள்வது மனைவியிடம் மட்டுமே.

திருப்பூர்:

திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் கலந்து கொண்டு குடும்பம் ஒரு கதம்பம் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் இந்த அளவிற்கு உயர்ந்த இடத்தை அடைந்ததற்கான பெருமை என்னுடைய ஆசிரியர்களையே சாரும். நான் படிக்கும் போது எனது ஆசிரியர்கள் சொல்லி கொடுத்ததை நான் சரியாக கவனிக்கவில்லை. அதேநேரம் வாத்தியார்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே வாத்தியார்கள் என்றாலே எனக்கு தனி மரியாதை உண்டு.

பொதுவாக மனிதன் வலியை தாங்கக்கூடியது 10 பாயிண்ட் என்றால் ஆண்கள் 7 பாயிண்டிலேயே உயிரிழக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது என்றும், ஆனால் பிரசவ வலியில் பெண்கள் 7.6 பாயிண்ட் வரை வலியை தாங்குகிறார்கள் என்று புள்ளி விபரம் கூறுகிறது.

எனவே தாய்மை என்பது பெண்களுக்கு மரியாதைக்குரிய சமாச்சாரம் ஆகும். குடும்பத்தில் நாம் அனைத்து காரியங்களையும் பகிர்ந்து கொள்வது மனைவியிடம் மட்டுமே. அந்த அளவிற்கு நாம் அந்நியோன்யமாக இருக்கும்போது, அதை பார்க்கும் குழந்தைகளும் நல்ல முறையில் வளருவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News