தமிழ்நாடு

கருணாநிதி ஒரு பன்முக தன்மையாளர்- பிரகாஷ் ராஜ்

Published On 2024-06-01 06:56 GMT   |   Update On 2024-06-01 06:56 GMT
  • சாதி அரசியல் செய்வதெல்லாம் பெரிதல்ல... கொள்கை பற்றால் தலைவர் ஆனவர் கருணாநிதி.
  • கருணாநிதி விதைத்த விதை தமிழர்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறது.

சென்னை:

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா பற்றியும் கருணாநிதியாக நடித்தது குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

* கருணாநிதியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமை. கருணாநிதியை பார்த்து கற்றுக்கொண்டதை இப்போது பேசுகிறேன்.

* கருணாநிதி இருக்கும் வரை யாரும் இங்கு வாலாட்ட முடியவில்லை.

* கலைஞர் நூற்றாண்டு என்பதைவிட ஒரு நூற்றாண்டு கலைஞரின் விழா என்பதே சரி.

* கல்லக்குடி போராட்ட காட்சியில் நடித்தபோது வியர்த்து விட்டது.



* கருணாநிதி ஒரு பன்முக தன்மையாளர்.

* சாதி அரசியல் செய்வதெல்லாம் பெரிதல்ல... கொள்கை பற்றால் தலைவர் ஆனவர் கருணாநிதி.

* என் வசனத்தை பேச சிவாஜிக்கு பிறகு பிரகாஷ் ராஜ் இருக்கிறார் என கருணாநிதி கூறினார்.

* கருணாநிதி விதைத்த விதை தமிழர்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறது என்று கூறினார்.

மேலும் கவிஞர் பா.விஜய் கூறுகையில், கலைஞரின் வசனங்களுக்கு மாற்று வசனம் யாரும் செய்ய முடியாதது. அது ஒரு சகாப்தம்.

அரசியல் பயணத்தை பொறுத்தவரை இப்போது 2ம் கலைஞராக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.

முதல்வரின் நட்பு, வழிநடத்தலால் திரைத்துறை முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.

Tags:    

Similar News