தமிழ்நாடு (Tamil Nadu)

எடப்பாடி பழனிசாமி- எஸ்.பி. வேலுமணி இடையே உட்கட்சி பிரச்சனை: அண்ணாமலை

Published On 2024-06-06 10:12 GMT   |   Update On 2024-06-06 10:12 GMT
  • பாஜகவுடன் அதிமுக இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளை பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறார்.
  • அதிமுக-வின் மற்ற தலைவர்கள் பாஜக உடன் நாங்கள் இல்லை. இதனால் வராத வாக்குகள் வரும். தற்போது எங்களுக்க நிர்பந்நம் இல்லை என்றார்கள்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டார். அதற்கு முன் பத்திரிகையாளருக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாஜகவுடன் அதிமுக இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளை பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறார். அதிமுக-வின் மற்ற தலைவர்கள் பாஜக உடன் நாங்கள் இல்லை. இதனால் வராத வாக்குகள் வரும். தற்போது எங்களுக்க நிர்பந்நம் இல்லை என்றார்கள். இதனால் எஸ்.பி. வேலுமணி கூறியதை பார்க்கும்போது இதை பார்க்கும்போது அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது.

2019-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது மத்தியில் பாஜக 303 இடங்களை பிடித்தது. அப்போது கூட தமிழகத்தில் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. அதிமுக தலைவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் இந்த தேர்தலின் செய்தி. அதிமுக சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக மக்கள் நினைத்து விட்டார்கள். கூட்டணியில் இருக்கும்போது ஒரு பேச்சு. கூட்டணியில் இல்லாதபோது ஒரு பேச்சு.

கோவையில் தொகுதிக்கு உட்பட்ட ஆறு எம்.எல்.ஏ. தொகுதியிலும் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. இதற்கு முன்னதாக கோவை தொகுதியில் இவ்வாறு பார்க்கவில்லை. கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள். மக்கள் நிராகரித்ததால் வேலுமணி இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் வளருகின்ற கட்சி. வளர்ந்து கொண்டிருக்கிறோம். பூனை யானையாக வேண்டுமென்றால் கடுமையான பாதையில் நடந்து செல்ல வேண்டும். 3 சதவீதம் 10 ஆக வேண்டும். 10 சதவீதம் 20 ஆக வேண்டும். 20 சதவீம் 30 ஆக வேண்டும். பின்னர் எம்எல்ஏ-வாக வேண்டும். எம்.பியாக வேண்டும். அதுவரை கடுமையாக பணி செய்ய வேண்டும். இதனால் தொண்டரக்ள் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம்.

திமுக தொண்டர்களுக்கு கை வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் என்மீது கை வையுங்கள். அப்பாவி ஆட்டை ஏன் வெட்டுகிறீர்கள்.

10 சதவீதத்திற்கு மேல் வாக்கு பெற்றது ஏற்றம் இல்லையா? 12 இடத்தில் 2-வது இடம் என்பது ஏற்றம் இல்லையா? அதிமுகவின் கோட்டை என கூறப்பட்ட கோவையில் ஜஸ்ட் டெபாசிஸ்ட் வாங்கிருக்கிறார்கள். 3 முனை போட்டி 2 முனை போட்டியாக மாறி 40 முதல் 45 சதவீத வாக்குகள் வரும்.

மின்சாரம் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு சொல்லவில்லை. அதற்கான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிடட்டும். 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

மத்திய இணை அமைச்சர் பதவி கொடுக்கப்படுவதா கூறப்படுகிறதே? என்று கேள்விக்கு பதில் அளிக்காமல் வேறு கேள்விக்கு சென்றார்.

Tags:    

Similar News