தமிழ்நாடு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
- காவல்துறை இதுவரை 18 பேரை கைது செய்துள்ளது.
- தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ள தமிழக காவல்துறை இதுவரை 18 பேரை கைது செய்துள்ளது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முகிலன், அப்பு, விஜய் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படுகொலை சம்பந்தமாக நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைதான மூவரையும் சேர்த்தால், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.