search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Armstrong"

    • கொலை வழக்கில் வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உள்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • 3-வது குற்றவாளியாக நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கடந்த ஆண்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக முதலில் தகவல்கள் வெளியானது.

    இதுதொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 10 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பின்னணியில் மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

    இதையடுத்து இந்த கொலை வழக்கில் வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உள்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் தாதா அஞ்சலை, நாகேந்திரனின் மகனான இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமன் ஆகியோர் கைதானவர்களில் முக்கியமானவர்கள் ஆவா்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி சம்பவ செந்தில், வக்கீல் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இருவரையும் தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இவர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை தனிப்படை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் 5ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதில் போலீசில் சிக்காமல் தலைமறைவாக உள்ள சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் உள்பட 30 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    முதல் குற்றவாளியாக நாகேந்திரன் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 2-வது குற்றவாளியாக சம்பவ செந்தில், 3-வது குற்றவாளியாக நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தவிர ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 28 பேரின் பங்கு என்ன? என்பது பற்றியும் குற்றப்பத்திரிகையில் விரிவான தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

    ஆம்ஸ்ட்ராங்குடன் இளைஞர் காங்கிரஸ் பிரமுகரான அஸ்வத்தாமனுக்கு ஏற்பட்டிருந்த பகை, ஆற்காடு சுரேஷ் கொலையான அவரது தம்பி பொன்னை பாலுவுடன் ஏற்பட்டிருந்த முன் விரோதம், உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

    ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னை பாலு மற்றும் அவனது கூட்டாளிகள் ஓராண்டாக திட்டம் போட்டு செயல்பட்டிருந்தனர். அது தொடர்பான தகவல்கள் முழுமையாக இடம் பெற்றுள்ளன.

    இவர்களோடு வடசென்னையை சேர்ந்த பெண் தாதா அஞ்சலை மற்றும் ரவுடிக்கும்பலை சேர்ந்தவர்கள் செய்த பண உதவி மற்றும் ரவுடிகள் வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தது போன்ற தகவல்களும் உள்ளன.

    ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகும் நிலையில் திட்டமிட்டபடி போலீசார் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

    இதை தொடர்ந்து வழக்கு விசாரணை எழும்பூர் கோர்ட்டில் தொடர்ச்சியாக நடத்தப்பட உள்ளது.

    இந்த விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் வழக்கு மீண்டும் வேகமெடுத்துள்ளது.

    • கடந்த 2 மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
    • ‘ஏ’ பிளஸ் மற்றும் ‘ஏ’ வகைகளைச் சேர்ந்த 31 குற்றவாளிகளும் 86 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் அடங்குவர்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 117 பேர் ரவுடிகள் ஆவர். 'ஏ' பிளஸ் மற்றும் 'ஏ' வகைகளைச் சேர்ந்த 31 குற்றவாளிகளும் 86 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் அடங்குவர். மேலும் 32 கொலை, கொலை முயற்சி குற்றவாளிகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சம்பந்தப்பட்ட 33 குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பிறகு போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர் மலேசியா தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த பலரையும் போலீசார் அடுத்தடுத்து விசாரித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு சென்னை போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி வழக்கறிஞர் மோனிஷாவிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மொட்டை கிருஷ்ணனும் இயக்குநர் நெல்சனின் மனைவியும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் என்பதால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    மொட்டை கிருஷ்ணனுடன் இயக்குநர் நெல்சன் மனைவி தொடர்ந்து செல்போனில் பேசிவந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி மொட்டை கிருஷ்ணன் குறித்து திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் அடையாறில் உள்ள நெல்சன் வீட்டிற்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

    • ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்களில் ராஜேசும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தலைமறைவாக உள்ள சம்பவ செந்திலின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. இவர்களில் வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்களில் ராஜேசும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய 2 வயது மகளும் கலந்துக் கொண்டனர்.
    • அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறியகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், பகுஜன் சமாஜ் கட்சியினரும், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய 2 வயது மகளும் கலந்துக் கொண்டனர். மேலும், இயக்குனர் பா.ரஞ்சித், கட்சி ஆதரவாளர்கள் பலரும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

    போராட்டத்தின்போது, நீதி வேண்டும் நீதி வேண்டும் ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு நீதி வேண்டும் னெ பதாகைகளை ஏந்து கோஷமிட்டனர்.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 1500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரான அஸ்வத்தாமன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
    • பாஜக மாநில துணை தலைவராக உள்ள பால்கனகராஜ் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வருகிறார்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் பா.ஜனதாவை சேர்ந்த பிரபல பெண் தாதா அஞ்சலை, அ.தி.மு.க.வைச் சேர்ந்த மலர்க்கொடி, த.மா.கா. வக்கீல் ஹரிகரன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரான அஸ்வத்தாமன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் இது போன்று தொடர்ச்சியாக அரசியல் பிரமுகர்கள் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகியான பிரபல வக்கீல் பால் கனகராஜிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தி உள்ளனர்.

    பாஜக மாநில துணை தலைவராக உள்ள பால்கனகராஜ் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வருகிறார். பாஜகவில் சேர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் பால் கனகராஜ் ரவுடிகள் சார்பிலும் ஆஜராகி வாதாடி இருக்கிறார்.

    இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடிகளான நாகேந்திரன், சம்பவ செந்தில் ஆகியோர் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்களில் நாகேந்திரன் வேலூர் சிறையில் இருக்கும் நிலையில் சம்பவ செந்திலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இவர்கள் இருவருக்கும் பால்கனகராஜ் வக்கீலாக செயல்பட்டு இருப்பதாகவும், அதன் காரணமாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று பால்கனகராஜ் இன்று எழும்பூரில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • வழக்கில் படூரை சேர்ந்த சதீஷ் தான் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

    கடலூர்:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் அவரது வீட்டின் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம், போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், தனது நண்பனை இந்த கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும். அவனை விடுவிக்காவிட்டால் உங்கள் குடும்பத்தையே காலி செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த கடிதத்தை எழுதியவர் கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து செம்பியம் போலீசார், படுரில் இருந்த சதீஷை. பிடித்து நடத்திய விசாரணையில் சதீஷ் அப்பாவி என்பதும், தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் யார் என்று கூட தெரியாத படூரை சேர்ந்த சதீஷ் பெயரை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போலீசாருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது.

    அதில், செங்கல்பட்டை சேர்ந்த ரோஸ் நிர்மலா என்பவர் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்தபோது அவரிடம் கடலூரை சேர்ந்த, தனியார் நர்சரி பள்ளி தாளாளர் அருண்ராஜ் பள்ளி அங்கீகாரம் தொடர்பாக மனு அளித்த போது, அதை ரோஸ் நிர்மலா நிராகரித்துள்ளார். பின்னர், அந்த பதவியில் இருந்து ரோஸ் நிர்மலா ஓய்வும் பெற்றுவிட்டார். இந்நிலையில், தனது பள்ளிக்கு அங்கீகாரம் வழங்க மறுத்ததால் அவரை பழி வாங்குவதற்காக அருண் ராஜ் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

    ரோஸ் நிர்மலாவின் செங்கல்பட்டு வீட்டின் முன்பும், அவரது மகள் வசிக்கும் படூர் வீட்டின் முன்பும் பல்வேறு அருவருக்கத்தக்க தகவல்களை போஸ்டர்களாக ஒட்டி வந்துள்ளார்.

    மேலும், ரோஸ் நிர்மலாவின் மகள் குறித்தும் அவரது வீடு, கடை ஆகிய பல்வேறு இடங்களிலும் போஸ்டர்களை ஒட்டி அசிங்கப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து ரோஸ் நிர்மலா அப்போதைய தாம்பரம் போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்ததை தொடர்ந்து, கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் படூரை சேர்ந்த சதீஷ் தான் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் சாட்சிகளை கலைக்கவும், மிரட்டவும் அருண்ராஜ் இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், அருண்ராஜை பிடிக்க கேளம்பாக்கம் போலீசார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிக்கு விரைந்து வந்தனர். அங்கு அருண்ராஜை கைது செய்து சென்னை அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • இளைஞர் காங்கிரசின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு இளைஞர் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அஸ்வத்தாமன் நீக்கி வைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.

    கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு முரணாக அவர் நடந்து கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் எப்போதும் உயர்ந்த ஒருமைப்பாடு மற்றும் ஒழுக்கத்தை பராமரித்து வருகிறது. இளைஞர் காங்கிரசின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆயுதங்கள் மற்றும் பண உதவி செய்தவர்களையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
    • ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் கொலை சதியின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகளை ஏற்கனவே போலீசார் 2 முறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளனர். இதன் அடிப்படையில் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் சிக்கி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து பொன்னை பாலு உள்பட மேலும் 5 பேரை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்படி பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிஹரன், சிவா ஆகிய 5 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    இந்த விசாரணையின் போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் பல தகவல்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆயுதங்கள் மற்றும் பண உதவி செய்தவர்களையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் காவலில் எடுப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தலைமறைவாக உள்ள வக்கீல் உள்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்கள் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே போலீசார் 3 பேரையும் தேடுகிறார்கள்.

    பொன்னை பாலு உள்பட 5 பேரை காவலில் எடுக்கும் போது இவர்கள் 3 பேர் பற்றியும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    • காவல்துறை இதுவரை 18 பேரை கைது செய்துள்ளது.
    • தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ள தமிழக காவல்துறை இதுவரை 18 பேரை கைது செய்துள்ளது.

    இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முகிலன், அப்பு, விஜய் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    படுகொலை சம்பந்தமாக நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைதான மூவரையும் சேர்த்தால், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

    • போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 2 பேர் பிடிபட்டுள்ளனர்.

    சென்னை:

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை 17 பேரை கைது செய்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 2 பேர் பிடிபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரை வேவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருமலையின் உறவினரான பிரதீப் மற்றும் முகிலன் ஆகிய 2 பேர் பிடிபட்டுள்ளனர்.

    இதுவரை கைதான நபர்களின் செல்போன் எண்களை வைத்து துப்பு துலக்கி வரும் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் தான் பிரதீப்பும், முகிலனும் தற்போது பிடிபட்டுள்ளனர். இவர்களை தவிர மேலும் 50 பேரும் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    இந்த லிங்கை கிளிக் செய்யவும்- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- மேலும் ஒரு வழக்கறிஞர் கைது

    • பெரம்பூரில் பதுங்கி இருந்தது குறித்தும் போலீசாரிடம் அருள் விளக்கி கூறியதாக கூறப்படுகிறது.
    • ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எப்போது அழைத்தாலும் நேரில் வரவேண்டும் என்று கூறி மிண்ட் ரமேசை அனுப்பி வைத்துள்ளனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, வக்கீல் அருள், ராமு ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வக்கீல் அருளை, புழல் மற்றும் பெரம்பூர் பகுதிகளுக்கு இன்று காலையில் நேரில் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். புழலில் சதிதிட்டம் தீட்டியதாக கூறப்படும் இடம், மற்றும் பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு வேவு பார்த்த இடங்கள் ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது சதி திட்டம் தீட்டியது பற்றியும், பெரம்பூரில் பதுங்கி இருந்தது குறித்தும் போலீசாரிடம் அருள் விளக்கி கூறியதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர்கள் மலர்க்கொடி, ஹரிதரன், த.மா.கா.வை சேர்ந்த வக்கீல் ஹரிகரன், பா.ஜனதாவை சேர்ந்த அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவை சேர்ந்த மிண்ட் ரமேஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளராக உள்ள மிண்ட் ரமேசிடம் 2 நாட்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடியுடன் மிண்ட் ரமேஷ் தொடர்பில் இருந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவருக்கும் தொடர்பு இருக்குமோ? என்கிற கோணத்திலேயே விசாரணை நடத்தப்பட்டது. மிண்ட் ரமேசின் செல்போன் தொடர்புகள், அவரது வங்கி கணக்குகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மிண்ட் ரமேசுக்கு தொடர்பு இருப்பது போன்ற எந்த தகவல்களும் போலீசிடம் சிக்கவில்லை. இதையடுத்து போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எப்போது அழைத்தாலும் நேரில் வரவேண்டும் என்று கூறி மிண்ட் ரமேசை அனுப்பி வைத்துள்ளனர்.

    இதே போன்று இன்னொரு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். அவரது வங்கி கணக்குகள் முழுவதையும் போலீசார் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×