தமிழ்நாடு

பாஜகவை எதிர்க்கிற கூட்டணியில் தான் மா.கம்யூனிஸ்டு கட்சி இருக்கும்- பாலகிருஷ்ணன்

Published On 2024-08-20 04:31 GMT   |   Update On 2024-08-20 04:31 GMT
  • தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது.
  • சென்னை மாநகராட்சியை கண்டித்து வருகிற 28-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம்.

திருவாரூர்:

திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்தில் தி.மு.க. பங்கேற்றது குறித்து அரசு தான் பதில் சொல்ல வேண்டும். எங்களை பொறுத்த அளவு தி.மு.க. தேனீர் விருந்தில் பங்கேற்காது என்று தான் கூறினார்கள். தி.மு.க. அரசும், கவர்னரும் தொடர்ந்து முரண்பாட்டுடன் இருக்க வேண்டாம் என்பதற்காக தேனீர் விருந்தில் கலந்து கொண்டதாக கூறுகிறார்கள்.

கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசிடம் கேட்டதற்கு உடனடியாக ஒத்துக் கொண்டார்கள். அதே வேளையில், தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது.

சொத்து வரி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியை கண்டித்து வருகிற 28-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம்.

பாஜக.வுடன் யார் கூட்டணியில் சென்றாலும் அவர்களை எதிர்க்கிற கூட்டணியில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News