தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் கள்ளுக்கடைகள்? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Published On 2024-07-22 06:42 GMT   |   Update On 2024-07-22 06:42 GMT
  • தமிழக அரசு பதில் அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
  • ரேசன் கடைகளில் மது விற்க அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.

தமிழகத்தில் கள்ளுக்கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏன் மறுபரிசீலனை செய்ய கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபானங்களை சூப்பர் மார்க்கெட், ரேசன் கடைகளில் விற்க அனுமதி கோரிய வழக்கை தள்ளி வைத்து பொறுப்பு தலைமை நீதிபதி கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்கவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

Similar News