தமிழ்நாடு (Tamil Nadu)

எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிசிஐடி அதிரடி சோதனை

Published On 2024-07-07 01:48 GMT   |   Update On 2024-07-07 01:48 GMT
  • வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
  • சோதனையை அதிகரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சொத்து மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு நேற்று தள்ளுபடியான நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் - கோவை ரோடு என்.எஸ்.ஆர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டரை அலுவலகம், ரெயின்போ அப்பார்ட்மெண்டில் உள்ள அவரது தம்பி சேகர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சிபிசிஐடி அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல்வேறு இடங்களில் சோதனையை அதிகரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News