தமிழ்நாடு (Tamil Nadu)

4 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

Published On 2024-10-15 02:02 GMT   |   Update On 2024-10-15 02:02 GMT
  • வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
  • சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News