தமிழ்நாடு

நள்ளிரவு முதல் சென்னையில் வெளுத்து வாங்கிய மழை

Published On 2024-08-05 01:46 GMT   |   Update On 2024-08-05 01:46 GMT
  • லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
  • பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல், கிண்டி, சேத்துப்பட்டு என நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

நள்ளிரவு துவங்கிய மழை அதிகாலை வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதேபோன்று செங்கல்பட்டு பகுதியிலும் மழை பெய்தது.

Tags:    

Similar News