தமிழ்நாடு

ராகுலுக்கு அதிகரித்து வரும் மக்களின் ஆதரவு சிலரை நிலைகுலைய வைத்துள்ளது- மு.க.ஸ்டாலின்

Published On 2024-09-18 09:41 GMT   |   Update On 2024-09-18 09:41 GMT
  • எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
  • வன்முறை மற்றும் மிரட்டலுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

"இந்திரா காந்திக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேரும்" என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, ஷிண்டே சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பாஜக தலைவர் ஒருவர் ராகுல்காந்தி 'அவரது பாட்டிக்கு நேர்ந்த கதியை சந்திக்க நேரிடும்' என்ற மிரட்டலுக்கும், ஷிண்டே சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பதாக கூறிய மிரட்டல்கள் பற்றிய ஊடகச் செய்திகளால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

எனது சகோதரர் ராகுலுக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பது, சிலரை நிலைகுலைய வைத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, வன்முறை மற்றும் மிரட்டலுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News