தமிழ்நாடு (Tamil Nadu)

கிறிஸ்துமஸ் பண்டிகை-தொடர் விடுமுறை: விமான கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு

Published On 2023-12-23 09:19 GMT   |   Update On 2023-12-23 09:19 GMT
  • பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விடஅதிகமாக உள்ளது.
  • அனைத்து விமானங்களிலும் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது.

ஆலந்தூர்:

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. மேலும் சனி, ஞாயிறு என்று தொடர்ந்து விடுமுறை என்பதாலும், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடப்பட்டு உள்ளதாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநில மக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

தென் மாவட்டங்கள் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்வதில் ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விடஅதிகமாக உள்ளது. மக்கள் விமான பயணங்களை அதிக அளவில் தேர்வு செய்வதால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.

சென்னை- திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.2,864. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ.14,065 முதல் ரூ.17,910 வரை அதிகரித்து உள்ளது.

இதேபோல் சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.3,018. ஆனால் இப்போது ரூ.15,661 முதல் ரூ.16,124 வரை கட்டணம் உள்ளது.

சென்னை-கோழிக்கோடு கட்டணம் ரூ.12,590 முதல் ரூ.15,552 வரையும் (வழக்கமான கட்டணம் ரூ.3,734) சென்னை-கண்ணூர்- ரூ.11,696 முதல் ரூ.15,858 வரையும் (வழக்கமான கட்டணம் ரூ.3,519) உயர்ந்து இருக்கிறது.

சென்னை-தூத்துக்குடிக்கு ரூ.10,894 முதல் ரூ.14,234 வரையும், கோவை- ரூ.10,769 முதல் ரூ.14,769, திருச்சி-ரூ.5,631 முதல் ரூ.9,555 வரையும், மதுரை-ரூ.10,192 முதல் ரூ.17,950 வரையும் உள்ளது. கட்டணம் பல மடங்கு உயர்ந்தாலும், தென் மாவட்டம் மற்றும் கேரள மாநில மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். இதனால் அனைத்து விமானங்களிலும் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது.

Tags:    

Similar News