தமிழ்நாடு (Tamil Nadu)

ஃபோர்டு நிறுவனத்திற்கான இசைவு ஆணை புதுப்பிப்பு

Published On 2024-09-23 16:32 GMT   |   Update On 2024-09-23 16:32 GMT
  • தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவு ஆணை கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியானது.
  • தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.

ஃபோர்டு நிறுவனத்தின் கோரிக்கையின்படி மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவு ஆணையை தமிழ்நடு மாசு கட்டுப்பாடு வாரியம் புதுப்பித்து உத்தரவிட்டுள்ளது.

இசைவு வாணையை புதுப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.

தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவு ஆணை கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியானது.

இந்நிலையில், விண்ணப்பித்த பரிசீலனை செய்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைவு வாணையை 31.3.2028 வரை புதுப்பித்து அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவில் தனது உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் 2022ம் ஆண்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News