தமிழ்நாடு

தேவநாதனுக்கு வரும் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Published On 2024-09-03 11:32 GMT   |   Update On 2024-09-03 11:32 GMT
  • சுமார் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.
  • தேவநாதன் உடன் கைதான குணசீலன், மகிமைநாதன் ஆகியோருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவன மோசடி வழக்கில் வின் டிவி உரிமையாளர் தேவநாதன் யாதவ் திருச்சியில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர வைப்பு நிதி வைத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். டெபாசிட் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனுக்கு நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிப்பு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேவநாதன் உடன் கைதான குணசீலன், மகிமைநாதன் ஆகியோருக்கும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News