தமிழ்நாடு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

Published On 2022-11-12 04:43 GMT   |   Update On 2022-11-12 04:43 GMT
  • முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 525 காசாக நிர்ணயிக்கப்பட்டது.
  • பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.75 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.95 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் மண்டல ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருவதால் இங்கும் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதன்படி, முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 525 காசாக நிர்ணயிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.75 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.95 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News