தமிழ்நாடு

அ.தி.மு.கவை காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும்- புகழேந்தி

Published On 2024-07-16 05:52 GMT   |   Update On 2024-07-16 05:52 GMT
  • எல்லோரும் ஒன்றிணைந்தால் தான் கட்சி காப்பாற்றப்படும்.
  • எனது கருத்து மட்டுமல்ல, தொண்டர்கள், பொதுமக்கள் கருத்து மற்றும் விருப்பம் ஆகும். அதற்கு வழிவகுக்க வேண்டும்.

ஓசூர்:

ஓசூரில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அவரது சிலைக்கு.நேற்று பெங்களூரு புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது புகழேந்தி கூறியதாவது:-

மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நெஞ்சார பாராட்டுகிறேன். ரவுடிகள் சுடப்படுகிறார்கள் என்றால் அதனை நான் வரவேற்கிறேன். தி.மு.க. அரசு, யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரவுடிகளை சுட்டுத்தள்ள வேண்டும்.

அ.தி.மு.க வை ஒருங்கிணைக்க, வெறும் வாயால் பேசிக்கொண்டிருப்பதை விட மனதார அனைவரும் முன்வர வேண்டும். . எல்லோரும் ஒன்றிணைந்தால் தான் கட்சி காப்பாற்றப்படும். இது எனது கருத்து மட்டுமல்ல, தொண்டர்கள், பொதுமக்கள் கருத்து மற்றும் விருப்பம் ஆகும். அதற்கு வழிவகுக்க வேண்டும். அதற்காகத்தான் எங்கள் ஒருங்கிணைப்புக்குழு பாடுபட்டு வருகிறது. இது சரிப்பட்டு வரவில்லை என்றால் மக்கள் மத்தியில், அவர்கள் யார்? என்பதை தோலுரித்து காட்டுவதற்கு ஒருங்கிணைப்பு குழு தயங்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, டாக்டர் ஜான் திமோதி, ராஜேந்திர கவுடா, குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News