தமிழ்நாடு

ஒரு மாதத்துக்கு முன்பு தான் முபின் கார் ஓட்ட கற்றுக்கொண்டார்- மாமனார் வெளியிட்ட தகவல்

Published On 2022-11-04 08:30 GMT   |   Update On 2022-11-04 08:30 GMT
  • திருமணத்திற்கு பின்பு பெற்றோருடன் முபின் வசித்து வந்தார்.
  • முபினை பார்ப்பதற்கு நண்பர்கள் யாரும் வீட்டிற்கு வந்ததில்லை. அவரது உறவினர்கள் அசாரூதின், அப்சர்கான் மட்டுமே அவருடன் எப்போதும் இருப்பார்கள்.

கோவை:

கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபினின் மாமனார் அனிபா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

திருமணத்திற்கு பின்பு பெற்றோருடன் முபின் வசித்து வந்தார். கடந்த 2019-ல் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பிறகு அவரது வீட்டில் ஒதுங்கி கொண்டனர். அதன்பின்னர் எங்கள் வீட்டின் அருகே வசித்தார். இப்போது இருக்கும் வீட்டிற்கு சென்று ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தான் சென்றனர்.

குழந்தைகளை அவர் அடித்ததில்லை. அப்படிப்பட்டவர் இது போன்று செய்தாரா? என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் எங்களுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் முபின் கார் ஓட்டி பழகினார். இதுகுறித்து கேட்டபோது, சரியான வேலை இல்லாததால் ஆக்டிங் டிரைவராக செல்வதற்காக கார் ஓட்டுவதாக தெரிவித்தார். சம்பவம் நடைபெற்ற 2 நாளுக்கு முன்னர் எங்கள் வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவே இல்லை.

முபினை பார்ப்பதற்கு நண்பர்கள் யாரும் வீட்டிற்கு வந்ததில்லை. அவரது உறவினர்கள் அசாரூதின், அப்சர்கான் மட்டுமே அவருடன் எப்போதும் இருப்பார்கள்.

வீட்டில் இருந்த பெட்டிகள் குறித்து எங்கள் மகள் முபினிடம் கேட்டுள்ளார். அதற்கு நாட்டு மருந்து எனவும் தேனுடன் சேர்த்து விற்பனை செய்வதற்காக வைத்திருப்பதாகவும் தெரிவித்து சமாளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News