தமிழ்நாடு (Tamil Nadu)
பேசின் பாலத்தில் பைக்குகள் மீது அரசு பஸ் மோதி விபத்து
- பஸ்சில் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக அரசு பஸ் ஓட்டுநர் தகவல் தெரிவித்துள்ளார்.
- விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை பேசின் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் 3 பைக்குகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கிய பைக் ஓட்டுநர் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சக வாகன ஓட்டிகள் மீட்டதால் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது.
பஸ்சில் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக அரசு பஸ் ஓட்டுநர் தகவல் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.