தமிழ்நாடு (Tamil Nadu)

கனமழை எச்சரிக்கை- கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்

Published On 2024-10-15 03:15 GMT   |   Update On 2024-10-15 03:15 GMT
  • வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
  • கடந்த முறை மழை பெய்தபோது பல கார்கள் வெள்ளத்தில் மூழ்கின.

வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னைக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடப்பட்டுள்ளது.

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில், வாகன ஓட்டிகள் வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசையாக தங்களது கார்களை நிறுத்திவைத்தனர்.

வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அபராதம் விதிக்கப்படவில்லை என்றும் அதுபோன்ற வதந்திகள் பரவுவதாக தாம்பரம் காவல் சரகத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

 

சென்னைக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை மழை பெய்தபோது பல கார்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்நிலையில் வேளச்சேரி மேம்பாலத்தில் 500-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது எந்தவித அச்சமும் இன்றி கார் பார்க்கிங் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News