தமிழ்நாடு (Tamil Nadu)

தொடர்மழை: ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்தது

Published On 2024-07-29 04:22 GMT   |   Update On 2024-07-29 04:22 GMT
  • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடுங்குளிர் நிவுகிறது.
  • சுற்றுலா தொழிலை நம்பி இருக்கும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்துக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு அவர் வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடுங்குளிர் நிவுகிறது. மேலும் தொடர்ந்து சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து அங்குள்ள சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

குறிப்பாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்து சென்றனர். இதனால் சுற்றுலா தொழிலை நம்பி இருக்கும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஊட்டியில் கடந்த 3 நாட்களாக மழை சற்று ஓய்ந்து காணப்படுகிறது. இருப்பினும் தொடர்மழையால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு அங்கு தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக பகல் நேரங்களில் கடும் மேகமூட்டம் தென்படுகிறது.

நீலகிரி மலைப்பாதையில் மேக மூட்டம் படிந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் தற்போது முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

மேலும் மலைபாதையில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசார் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகளிடம் சுற்றுலா வாகனங்கள் கவனத்துடன் இயக்க வேண்டுமென அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News