தமிழ்நாடு
வேங்கை வயல்-நாங்குனேரிக்கு முதல்வர் செல்லாதது வருத்தம்! - வன்னியரசு சொல்கிறார்
- வேங்கைவயல் கொடூரம், நாங்குநேரி வன்முறை இரண்டையுமே தமிழகத்தின் அவமானச் சின்னங்களாகவே பார்க்க வேண்டும்.
- குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வருத்தத்துடன் கூறியதாவது:-
"வேங்கைவயல் கொடூரம், நாங்குநேரி வன்முறை இரண்டையுமே தமிழகத்தின் அவமானச் சின்னங்களாகவே பார்க்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதும், சமூகநீதிக்குச் சவால்விடும் சம்பவம் இது. அமைச்சர்கள் அங்கு சென்றிருந்தாலும், முதல்வர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்திருக்க வேண்டும். அப்போதுதான், சாதியவாதிகளுக்கு இதுபோல் செய்வதற்குத் துணிச்சல் வராது. முதல்வர் நேரில் அங்கு செல்லாதது வருத்தம்தான்!"