தமிழ்நாடு (Tamil Nadu)

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்- பண்ருட்டி சிப்ஸ் கடை உரிமையாளர் கைது

Published On 2024-06-23 05:50 GMT   |   Update On 2024-06-23 05:50 GMT
  • சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • தண்ணீரில் கலந்து விற்கப்பட்டு தான் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கடலூர்:

கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயத்தை குடித்து 56 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இது பெரிய நெட்வொர்க்காக செயல்பட்டு வந்தது தெரிந்ததை அடுத்து பத்துக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுவருவதுடன், 6 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பண்ருட்டியில் ஜோதி சிப்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வரும் சக்திவேல் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். தன்னுடைய ஜி.எஸ்.டி. பில்லை மாதேஷ் பயன்படுத்த அனுமதி அளித்ததால் கைது செய்யப்பட்டார். சக்திவேலின் ஜி.எஸ்.டி. பில்லை தான் பயன்படுத்தி மாதேஷ் 'மினரல் டர்பன்டன் ஆயில்'என்ற பொருளை வாங்கியுள்ளார். இதை தண்ணீரில் கலந்து விற்கப்பட்டு தான் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News