தமிழ்நாடு

ஸ்ரீகிருஷ்ணர் போதனைகளை பின்பற்றி நாட்டில் ஒற்றுமை தழைத்தோங்க வாழ்வோம்- எல்.முருகன்

Published On 2024-08-26 04:58 GMT   |   Update On 2024-08-26 04:59 GMT
  • இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
  • நாட்டு மக்கள் அனைவருக்கும் ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை:

இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமான இன்று, நாட்டு மக்கள் அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவத் கீதையின் வழி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு அளித்துள்ள போதனைகளை ஆழமாக பின்பற்றி, நாட்டில் ஒற்றுமை தழைத்தோங்க செய்து வாழ்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News