தமிழ்நாடு (Tamil Nadu)

தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் மோடி வர, தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Published On 2024-04-09 14:59 GMT   |   Update On 2024-04-09 14:59 GMT
  • பிரதமர் மோடி தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார்.
  • பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து பேசாதது ஏன்?

மதுரை, சிவகங்கை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை ரிங் ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்து பேசினார்.

அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

* இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களான சு. வெங்கடேசன் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

* புதிய பிரதமர் தமிழகத்திற்க நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் பிரதமராக இருப்பார். இப்போது இருக்கும் பிரதமர் போன்று இருக்கமாட்டார்.

* பிரதமர் மோடி தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார்.

* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் ஆளுநர்களால் தொல்லை கொடுப்பார்கள். இதுதான் மோடி இந்தியா.

* பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து பேசாதது ஏன்?

* ஒருதாய் மக்களாக வாழும் நாட்டில் மதவெறியை விதைத்து மக்களை பிளவுப்படுத்தினார் மோடி.

* ஐக்கிய முற்போக்கு கூட்டணி நாடு முழுவதும் 70 ஆயிரம் கோடிக்கு மேல் கல்விக்கடன் வழங்கியது. 65 ஆயிரம் கோடி அளவிற்கு சிறு விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டது. டி.ஆர். மத்திய மந்திரியாக இருக்கும்போது சுமார் 56 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. நெசவுத் தொழிலில் இருந்து சென்மார்க் வரி நீக்கப்பட்டது. இன்னும் ஏராளமாக உள்ளது. பிரதமர் மோடியால் பட்டியல் போட முடியுமா?.

* தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் மோடி வர, தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மீது மட்டும் பிரதமர் மோடிக்கு ஏன் இத்தனை வன்மம்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? நாங்கள் என்ன இரண்டாம்தர குடிமக்களா?

* திராவிட மாடலின் 3 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏராளமான சாதனைகள் செய்த பெருமிதத்துடன் வாக்குகள் கேட்க நின்றிருக்கிறேன்.

* உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நமது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக அமைந்துள்ளது கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்.

* கல்வியையும் மருத்துவத்தையும் இரு கண்களாக பார்க்கிறோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், திராவிடம் மீது பயம் இருப்பவர்கள் மதத்தின் விரோதியாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். மக்களை பிரித்து குளிர் காய நினைக்கும் மதவாத்திற்குதான் நாங்கள் எதிரி. மதத்திற்கு அல்ல. நான் முதலமைச்சராக பதவி ஏற்றபின் அதிகமாக கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் இந்து அறிநிலையத்துறை சார்பில் நடைபெறும் விழாக்களில்தான். அன்பிற்கு மட்டுமல்ல. ஆன்மீகத்திற்கும் அடையாம் மதுரைதான்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

Tags:    

Similar News