தமிழ்நாடு

மிலாது நபி: செப்டம்பர் 17 ஆம் தேதி விடுமுறை அறிவித்த தமிழக அரசு

Published On 2024-09-09 10:35 GMT   |   Update On 2024-09-09 10:35 GMT
  • இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும்.
  • செப்டம்பர் 17 ஆம் தேதி மிலாது நபி நாளில் விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மிலாது நபி பண்டிகை செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசின் காஜி அறிவுறுத்தி உள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் செப்டம்பர் 17 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளான மிலாது நபி உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிறை தெரியாததால், இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தான் தமிழக அரசு செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 17 ஆம் தேதி மிலாது நபி நாளில் விடுமுறை அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News