தமிழ்நாடு

பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் இருக்கும் வரை தமிழகத்தை நான் ஆள்கிறேன் என்று அர்த்தம்- மு.க.ஸ்டாலின்

Published On 2023-09-15 06:56 GMT   |   Update On 2023-09-15 07:31 GMT
  • தாய் தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' எனறு பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா இனி இந்த பெயரை யாராலும் நீக்க முடியாது.
  • எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.

காஞ்சிபுரம்:

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

என்னுடைய அரசியல் பயணத்துக்கு எத்தனையோ உந்துசக்திகள் இருக்கலாம் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்த மாதிரி இருந்தது. இந்த காஞ்சி மாநகர் ரொம்ப சின்ன வயதில், கோபாலபுரம் வீதியிலே, இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலமாக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது என்னுடைய வழக்கம். 1971-ம் ஆண்டு அண்ணாவின் கல்லறையிலே மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி அண்ணா சதுக்கத்தில் இருந்து அண்ணா சுடரை கையில் ஏந்தி தொடர் ஓட்டமாக நானும் நண்பர்களும் புறப்பட்டு காஞ்சீபுரம் வந்து கழக மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர் கையில் அண்ணா சுடரை நான் ஒப்படைத்தேன்.

இன்றைக்கு தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் எடுத்து வந்த சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி, மாநில சுயாட்சி உள்ளிட்ட தமிழ் சமுதாயத்தை காக்க கூடிய திராவிட சுடரை ஏந்தி வந்துள்ளேன்.

அவரது கொள்கைகளை ஏற்று வாழ்வதால்தான் தமிழ் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தொடங்கி வைக்க இங்கு வந்துள்ளேன். இந்த திட்டத்தை நான் தொடங்கி வைப்பது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பேராக நான் கருதுகிறேன்.

தாய் தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' எனறு பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா இனி இந்த பெயரை யாராலும் நீக்க முடியாது. இந்த பெயர் நீடிக்கும் காலமெல்லாம் இந்த நாட்டை அண்ணா துரை தான் ஆள்கிறான் என்றார்.

அதே போல் இன்றைக்கு மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.

இந்த 2½ ஆண்டில், எத்தனை திட்டங்கள், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி பெற விடியல் பயணத் திட்டம், பசியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், உயர்கல்வி கற்க வரும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குகிற புதுமைப் பெண் திட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நான் முதல்வன் திட்டம், இந்த திட்டங்களை தொடங்கிய நாட்களில் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை நான் அடைந்தேனோ, அதைவிட அதிகமான மகிழ்ச்சியில் இப்போது இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News