தமிழ்நாடு

உயர்மட்ட மேம்பாலம்

மதுரையின் புதிய அடையாளம் - 7.3 கி.மீ. உயர்மட்ட பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Published On 2023-04-08 14:32 GMT   |   Update On 2023-04-08 14:32 GMT
  • உயர்மட்ட மேம்பால பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நிறைவு பெற்றது.
  • கடந்த 6-ம் தேதி பாலத்தில் வாகனங்களை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

மதுரை:

மதுரை புதுநத்தம் சாலையில், பாரத் மாலா திட்டத்தின் கீழ் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. 268 தூண்களுடன் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில், 3 இடங்களில் வாகனங்கள் இறங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததையடுத்து கடந்த 6-ம் தேதி பாலத்தில் வாகனங்களை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அப்போது, மதுரை மேம்பாலத்தையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News