தமிழ்நாடு (Tamil Nadu)
முரசொலி செல்வம் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்
- முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர். இந்நிலையில்,
- முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர் மற்றும் அருமையான மனிதர்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர். இந்நிலையில், முரசொலி செல்வம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஜினி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர் மற்றும் அருமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.