தமிழ்நாடு (Tamil Nadu)

திருப்பத்தூர் மாவட்டம் 2 ஆக பிரிப்பு- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Published On 2022-11-09 09:29 GMT   |   Update On 2022-11-09 09:29 GMT
  • அ.தி.மு.க. நிர்வாக வசதியை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  • கோ. சுரேஷ்பாபு-திருப்பத்தூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் (ஆம்பூர், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிகள்).

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. நிர்வாக வசதியை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், அ.தி.மு.க. திருப்பத்தூர் வடக்கு மற்றும் திருப்பத்தூர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

கோ. சுரேஷ்பாபு-திருப்பத்தூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் (ஆம்பூர், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிகள்). டைகர் என்.எஸ்.கே. இளங்கோவன்-திருப்பத்தூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் (திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிகள்). கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News