தமிழ்நாடு

அறுபடை வீடுகளில் ரூ.789 கோடி மதிப்பீட்டில் பணிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-08-24 04:53 GMT   |   Update On 2024-08-24 04:53 GMT
  • அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு வந்த பின்னர் சிறப்பாக செயல்படுகிறது.
  • அறுபடை வீடு சுற்றுலாவிற்கு 813 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

சென்னை:

பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* இன்றும் நாளையும் முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெறுகிறது.

* அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு வந்த பின்னர் சிறப்பாக செயல்படுகிறது. அறநிலையத்துறை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* 7 முருகன் கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

* அறுபடை வீடு முருகன் கோவில்களில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

* பழனி கோவிலில் தை பூசம், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபயணம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

* அறுபடை வீடு சுற்றுலாவிற்கு 813 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

* பல்வேறு திருக்கோவில்களில் பணிகளை மேற்கொண்ட பின்னரே முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது.

* முத்தமிழ் முருகன் மாநாட்டு ஏற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செய்துள்ளார்.

* கோவிலை சிறப்பாக கவனிக்குமாறு சேகர்பாபுவை நியமித்தேன். ஆனால் கோவிலிலேயே குடியிருக்கும் அமைச்சராக உள்ளார்.

* 69 முருகன் திருக்கோவில்களில் பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

* அறுபடை வீடுகளில் ரூ.789 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

* அறுபடை வீடுகளுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதல் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

* அறுபடை வீடுகள் அல்லாத முருகன் கோவில்களில் ரூ.277 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

Tags:    

Similar News