தமிழ்நாடு

ஸ்தலசயன பெருமாள் கோயிலில் புரட்டாசி ஐந்தாம் வாரம் நிறைவுநாள் பஜனை

மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் பகுதியில் சனி மஹா பிரதோஷ வழிபாடுகள்

Published On 2022-10-23 05:15 GMT   |   Update On 2022-10-23 05:15 GMT
  • திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் சனி மஹா பிரதோஷம் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.
  • மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் புரட்டாசி ஐந்தாம் வாரம் நிறைவு நாள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் சனி மஹா பிரதோஷம் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள நந்தி சிலைக்கு பன்னீர், இளநீர், பால், சந்தனம், திருநீர் அபிஷேகம், பூ அலங்காரம் செய்யப்பட்டு அங்கிருந்து மலை உச்சியில் இருக்கும் வேதகிரீஸ்வருக்கு தீபாராதனை காண்பிக்கபட்டது.

மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் சிவன் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் புரட்டாசி ஐந்தாம் வாரம் நிறைவு நாள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கவிஞர் வரதராஜன் தலைமையில் நீலமங்கலம் பஜனை கோஷ்டியினரின் ஆன்மீக பஜனை நடத்தப்பட்டது. உள்ளூர், வெளியூர் பெருமாள் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் பஜனையில் பங்கேற்று பார்த்து, கேட்டு ரசித்தனர்.

Tags:    

Similar News