தமிழ்நாடு (Tamil Nadu)

கழகத்தின் தொண்டனாக திமுக பவள விழாவில் கலந்துக்கொள்வதில் பெருமைக்கொள்கிறேன்- செந்தில் பாலாஜி நெகிழ்ச்சி

Published On 2024-09-28 12:54 GMT   |   Update On 2024-09-28 12:54 GMT
  • இரும்பிலான இமயமலை போல உயர்ந்து நிற்கும், திமுக எனும் அறிவார்ந்த இயக்கத்தின் வயது 75 .
  • தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு நிலைத்து நிற்கும் எழுச்சிமிக்க கழகத்தின் பவள விழா.

தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜாமினில் வெளியே வந்த பிறகு அவர் கலந்துக் கொள்ளும் முதல் நிகழ்ச்சியான திமுக பவள விழா பொதுக்கூட்டம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு வெளியிட்டுள்ளார்

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமூகநீதியும் சமத்துவமும் நிறைந்த தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், தந்தை பெரியாரின் வழியில், பேரறிஞர் அண்ணா அவர்கள் துவக்கி, தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் கட்டிக்காத்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இரும்பிலான இமயமலை போல உயர்ந்து நிற்கும், திமுக எனும் அறிவார்ந்த இயக்கத்தின் வயது 75 .

புரட்சிக்கரமான கொள்கைகளால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு நிலைத்து நிற்கும் எழுச்சிமிக்க கழகத்தின் பவள விழா பொதுக்கூட்டத்தில், கழகத்தின் தொண்டனாக கலந்துக்கொள்வதில் பெருமைக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News