தமிழ்நாடு

நிகழ்கால காமராஜர் விஜய்- பார்வையற்ற மாணவி உருக்கம்

Published On 2024-07-03 06:14 GMT   |   Update On 2024-07-03 06:14 GMT
  • உங்களை ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் உணர்கிறேன்
  • உங்களை காண முடியவில்லை என்றாலும் உங்கள் அறிவுரைகளை உள்வாங்கி மகிழும் மாணவி நான்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் புதுச்சேரியை சேர்ந்த பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா பேசியதாவது:-

விஜய் அண்ணா, உங்கள் குரலைக் கேட்க வந்திருக்கிறேன். உங்களை ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் உணர்கிறேன் அண்ணா. இங்கு மதிப்பெண் பெற்று சாதனை படைத்ததை விட எங்களையும் எங்கள் பெற்றோரையும் அழைத்து மகிழ்வித்துள்ளீர்கள்.

தமிழகத்தின் தளபதியே கல்விக்கு கண் கொடுக்கும் நிகழ்கால கர்மவீரரே உங்களை காண முடியவில்லை என்றாலும் உங்கள் அறிவுரைகளை உள்வாங்கி மகிழும் மாணவி நான். உங்கள் பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துகள். இங்கு பேச வாய்ப்பளித்த தளபதி விஜய் அண்ணாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாணவி சண்முகப்பிரியா பேசி முடிக்கும் வரை விஜய் அவருக்கு மைக்கை பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.

Tags:    

Similar News