தமிழ்நாடு

4 கோடி ரூபாய் பணம் பறிமுதல்- பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆஜராக உத்தரவு

Published On 2024-07-05 12:57 GMT   |   Update On 2024-07-05 12:57 GMT
  • தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு.
  • தொலைபேசி உரையாடல் குறித்து விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பு வாதம்.

பாராளுமன்ற தேர்தலின்போது தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வரும் 11ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவித்துள்ளது.

தேர்தலின்போது தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில், ஏற்கனவே கோவையில் விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் விசாரணை தேவையற்றது என எஸ்.ஆர்.சேகர் தரப்பில் வாதாடப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராவதில் என்ன தயக்கம் ? ஏற்கனவே அமைப்புச் செயலாளர் ஆஜராகி உள்ளார் என அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி உரையாடல் குறித்து விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பு கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News