தமிழ்நாடு

அங்கன்வாடி மையத்தில் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் 1,250 பேர் படிக்கிறார்கள்- அமைச்சர் பேட்டி

Published On 2023-03-07 05:10 GMT   |   Update On 2023-03-07 07:24 GMT
  • வடமாநில தொழிலாளா்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை, வாரத்துக்கு 2 முட்டைகள் அடங்கிய சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
  • ஊட்டியின் காலநிலையை கருத்தில் கொண்டு தனி அறை அமைக்கப்பட்டு ஹீட்டா் மற்றும் கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். பின்னர் அவர் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களை சந்தித்து அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளில் பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த 185 போ் உள்பட 950 வடமாநில தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் கடந்த 2020-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனா்.

அவ்வாறு பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளா்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை, வாரத்துக்கு 2 முட்டைகள் அடங்கிய சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டியின் காலநிலையை கருத்தில் கொண்டு தனி அறை அமைக்கப்பட்டு ஹீட்டா் மற்றும் கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ச்சியாக இங்கு பணிபுரிவதாலும், பாதுகாப்பு உணா்வுடன் இருப்பதாலும் தான் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அவா்களது 1,250 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது நீலகிரி எம்.பி. ஆ.ராசா, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் இளஞ்செழியன், மாவட்ட ஆட்சியா் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், மருத்துவக் கல்லூரி முதல்வா் மனோகரி உள்பட பலா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News