தமிழ்நாடு

13-ந்தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்- திருமாவளவன் அறிவிப்பு

Published On 2023-01-09 09:07 GMT   |   Update On 2023-01-10 03:43 GMT
  • கவர்னரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான்.
  • இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம்.

சென்னை:

கவர்னரின் செயலை கண்டித்து முற்றுகை போராட்டத்தை விடுதலை சிறுத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது:-

கவர்னரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்.எஸ்.எஸ். முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும்.

அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

கவர்னரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News