தமிழ்நாடு (Tamil Nadu)

பயணிகளுக்கு முக்கிய அப்டேட் கொடுத்த சென்னை விமான நிலையம்

Published On 2024-10-16 03:41 GMT   |   Update On 2024-10-16 03:41 GMT
  • நேற்று பெய்த கனமழை காரணமாக சில விமானங்களின் சேவை ரத்தானது.
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு ஆபத்து இல்லை.

சென்னை:

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாகவும், சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் இன்று அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதனிடையே நேற்று பெய்த கனமழை காரணமாக சில விமானங்களின் சேவை ரத்தானது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு ஆபத்து இல்லை என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விமான பயணிகளுக்கு சென்னை விமான நிலையம் ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களிடம் சேவைப்பற்றி சரிபார்த்து அதற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

Tags:    

Similar News